‘‘கோச்சடையான் வதந்திகள் . படம் வருகிற 23–ந் தேதி உறுதியாக திரைக்கு வரும்.
கோச்சடையான் படம் 6 மொழிகளிலும் 2டி வடிவத்தில் தயாராகி, ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டு விட்டது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 3டி வடிவத்தில் தயாரான திரைப்படத்துக்கும் தணிக்கை செய்யப்பட்டு விட்டது.
3டி வடிவத்தில் தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டதால்தான் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட இயலவில்லை.
இதுதவிர, ஏற்கனவே சுமார் 4 ஆயிரம் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் முன்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்துக்குள் ஒரு லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று விட்டன. அதன்பிறகு மேலும் 2 ஆயிரம் திரையரங்குகள் கோச்சடையான் படத்தை திரையிட முன்வந்துள்ளன.
3டி வடிவத்தில் தயாராவதில் ஏற்பட்ட தாமதத்தினால், கோச்சடையான் படத்தை அனைத்து திரையரங்குகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப கால அவகாசம் தேவைப்பட்டது. படம், வருகிற 23–ந் தேதி அன்று வெளியாக தயார் நிலையில் உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்.
ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி, கோச்சடையான் படம் மே 23–ந் தேதி உறுதியாக வெளியாகும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment