Monday, August 18, 2014

மதுரையில் திரண்ட சிவாஜி ரசிகர்கள்!(புகைப் படங்கள்)

மதுரையில் திரண்ட சிவாஜி ரசிகர்கள்!




சிவாஜி உருவபடத்திற்கு மாலையிடும் திருச்சி ரசிகர்!

மதுரையில் சிவாஜி நடித்த தங்கச்சுரங்கம் திரைப்படம் சென்ட்ரல் திரைஅரங்கத்தில் திரையிடப்பட்டுள்ளது.இப்படத்தைக் காண சிவாஜி ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர்.புதுப் படங்களைக் காணவே ரசிகர்கள் இல்லாமல் திரை அரங்கங்கள் காற்று வாங்கும் நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் பெருமளவில் கூடி அரங்கத்தை ஹவுஸ்புல்லாக்கியது சிவாஜி நடிப்புக்கு ரசிகர்களிடம் உள்ள மவுசையே காட்டுகிறது.
மேலும் சிவாஜி ரசிகர்கள் மற்ற நடிகர்களின் ரசிகர்களை விட சிவாஜி மீது வெறித்தனமான அன்பையும் , அபிமானத்தையும் வைத்துள்ளவர்கள் என்பதை திருச்சியில் இருந்து இந்த படத்தைக் காண மதுரைக்கு வந்த ரசிகர் ஒருவரே சாட்சி.

Saturday, August 9, 2014

சென்னையில் மட்டும் 37 தியேட்டர்களில் அஞ்சான் ரிலீஸ்!

சென்னையில் மட்டும் 37 தியேட்டர்களில் அஞ்சான் ரிலீஸ்

 ஒரு காலத்தில் தமிழ் சினிமா, தமிழ் நாடு முழுவதுமே 40 தியேட்டருக்குள்தான் வெளிவரும். ஆனால் சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள அஞ்சான் படம் சென்னை நகரில் மட்டும் 37 தியேட்டர்களில் ரிலீசாகிறது. வருகிற 15ந் தேதி வெளிவரும் படத்திற்கு முன்பதிவுகள் தொடங்கிவிட்டன.
அஞ்சான் படத்தின் சென்னை நகர திரையீட்டு உரிமையை அபிராமி மால் வாங்கியுள்ளது. இதுகுறித்து அபிராமி ராமநாதன் கூறியதாவது:
முன்பெல்லாம் புது படங்கள் சென்னையில் 5 தியேட்டர்களில்தான் ரிலீசாகும். ரஜினி நடித்த சிவாஜி படத்தை வாங்கிய நாங்கள் அதனை 18 தியேட்டர்களில் திரையிட்டோம். இப்போது அஞ்சான் படத்தை வாங்கி 37 தியேட்டர்களில் திரையிடுகிறோம். காரணம் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் திருட்டு விடிசி வாங்கி விடக்கூடாது என்பதற்காக. அவர்கள் நடந்து போகிற தூரத்தில் உள்ள அத்தனை தியேட்டர்களிலும் திரையிடுகிறோம். சூர்யா, லிங்குசாமியின் கோல்டன் டச்சை நம்பி படத்தை வாங்கி இருக்கிறோம்
எங்கள் தியேட்டரில் ஆன்லைன் ரிசர்வேஷசன் தொடங்கிய இரண்டு மணி நேரத்துக்குள் 5 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று விட்டது. இதுவும் ஒரு சாதனை அளவாகும். என்றார் அபிராமி ராமநாதன்.

ஜிகர்தண்டா-விமர்சனம்

ஜிகர்தண்டா-விமர்சனம்

குறும்படம் இயக்கி விட்டு சினிமா இயக்க வந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், முதல் முறையாக ஒரு ஆக்ஷன் பிளஸ் காமெடி கதையை இப்போதுதான் பார்க்கிறோம். அது என்ன ஆக்ஷன் பிளஸ் காமெடி கதை என்கிறீர்களா. முதல் பாதி பக்கா ஆக்ஷன் கதை, இரண்டாவது பாதி காமெடி கதை.

 வித்தியாசமாக படம் பண்ண வேண்டியதுதான், அதற்காக முதல் பாதியை ஆக்ஷனின் உச்சத்திற்கு கொண்டு போய்விட்டு, அப்படியே அதற்கு எதிராக இரண்டாவது பாதி கதையை அமைப்பதா என்ற கேள்வி எழாமல் இல்லை. ஒருவேளை முதல் பாதி கதை எழுதி முடித்ததும் 'பவர் ஸ்டார்' படம் எதையாவது பார்த்திருப்பாரோ? அதன் பாதிப்புதான் 'டெரர்' ஆக இருந்த முதல்பாதியை பின்னர் 'டெரர் ஸ்டார்' காமெடி ஆன மாற்றியிருக்கிறார். எங்கே நமது படத்தையும் கொரிய படத்தின் 'காப்பி' படம் மற்றவர்கள் சொல்வதற்கு முன் நாமே சொல்லிவிடுவோம் என அதற்கும் படத்தில் ஒரு காட்சியை வைத்துவிட்டார்.

ஒரு தொலைக்காட்சியின் குறும்படப் போட்டியில் நடுவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையில், அந்த போட்டியில் கலந்து கொண்ட சித்தார்த்துக்கு நடுவர்களில் ஒருவரான ஒரு தயாரிப்பாளர் படம் இயக்க வாய்ப்புத் தருகிறேன் எனக் கூறி விடுகிறார். அவர் சித்தார்த்திடம் ரத்தம் தெறிக்கிற மாதிரி ஒரு ஆக்ஷன் படத்துக்கு கதை எழுதிட்டு வாங்க படம் இயக்கலாம் என்கிறார். ஒரு நிஜ ரவுடியின் வாழ்க்கைக் கதையை எழுத முடிவெடுத்து மதுரைக்குப் புறப்படுகிறார் சித்தார்த். அங்கு நண்பன் கருணாகரன் உதவியுடன், மதுரையை ஆட்டிப் படைக்கும் ரவுடி சிம்ஹாவின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்து கதையை உருவாக்க ஆரம்பிக்கிறார்.

சிம்ஹாவை 'என்கெளன்ட்ர்' செய்ய காவல்துறையும் முடிவெடுத்திருக்க, சிம்ஹாவின் போட்டியாளர்களும் அவரைக் கொலை செய்ய துடித்துக் கொண்டிருக்க, அந்த சூழ்நிலையில் சித்தார்த்தும், கருணாகரனும் சிம்ஹாவிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களை உளவு பார்க்க வந்தவர்கள் என சிம்ஹா நினைத்து போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார் இதன் பின் என்ன என்பதுதான் படத்தின் கலகலப்பான (?) மீதி கதை.

என்ன இது ஒரு பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் படத்துக்குரிய கதையை சொல்லிட்டு, இதன் பின் நடப்பது கலகலப்பான கதை என்று சொல்லியிருக்கிறோமே என ஆச்சரியப்பட வேண்டாம். இடைவேளைக்குப் பின் ஆக்ஷன் டிராக்கை விட கதை வேறு தடத்தில் பயணிக்கிறது. 'நான் வெஜிடேரியன்' ஹோட்டலுக்குப் போய் விட்டு தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது நிலைமை...

படத்துல ஹீரோ சித்தார்த்தா அல்லது சிம்ஹாவான்னு படம் பார்க்கிற நமக்கு மட்டுமில்லாம, எல்லாருக்குமே ஒரு குழப்பம் வரும். சித்தார்த்தை விட சிம்ஹாக்குதான் படத்துல காட்சிகள் அதிகமா இருக்கும் போல. சும்மா சொல்லக் கூடாது சிம்ஹா புகுந்து விளையாடியிருக்கிறார். 'அசால்ட்' சேது வாக அட்டகாசமாக நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள தோற்றத்தில் அப்படியே பொருந்திப் போகிறார். பொதுவா, நம்மைக் கவர்ந்த ஒரு கதாபாத்திரத்தில் வேறு நடிகர்கள் நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்போம். ஆனால், இந்த சேது கதாபாத்திரத்தைப் பொறுத்தவரையில் வேறு யாரையும் கற்பனையில் கூட கொண்டு வரமுடியவில்லை. நின்று, நிதானமாக நெத்தி அடி அடித்திருக்கிறார். இந்தப் படம் சிம்ஹாவை வேறு ஒரு உயரத்தில் கொண்டு போய் உட்கார வைத்துவிடும்.

திரைப்படம் இயக்கும் ஆசையில் கதை எழுதுவதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கு வரும் இயக்குனர் கதாபாத்திரத்தில் சித்தார்த். கொஞ்சம் அப்பாவித்தனமான கதாபாத்திரம், எதையுமே யோசித்து யோசித்து செய்கிறார். லட்சுமி மேனனிடம் காதலிலாவது ஜொலிப்பார் என்று பார்த்தால் அங்கும் ஒன்றுமில்லை, சிம்ஹாவிடம் கொஞ்சம் முறைத்துக் கொண்டாவது நிற்பார் என்று பார்த்தால் அங்கும் ஒன்றுமில்லை. இயக்குனர் கார்த்திக், சித்தார்த்திடம் கதாபாத்திரத்தை சரியாக சொல்லவில்லையா, அல்லது சித்தார்த், நமக்கு இருக்கும் முக்கியத்துவத்திற்கு இது போதும் என்று முடிவெடுத்துவிட்டாரா என்பது தெரியவில்லை. திறமையைக் கொட்டி நடிப்பதற்கு காட்சிகள் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சிம்ஹா கதாபாத்திரம் ஸ்டிராங்காக உருவாக்கப்பட்டு விட்டதால், சித்தார்த்தின் கதாபாத்திரம் எடுபடாமல் போய்விட்டது.

லட்சுமி மேனன் மொத்தமாக எத்தனை காட்சிகள் வந்தார் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வரும் ஒரு முன்னணி நாயகிக்கு இந்த அளவிற்கா குறைவான காட்சிகளை வைப்பது ?. படத்துக்குத் தேவையில்லை என்று நினைத்திருந்தால் மொத்தமாக அவரது கதாபாத்திரத்தைக் கூட வைக்காமல் போயிருக்கலாம். ஆனாலும், ஒரே ஒரு 'ட்விஸ்ட்'டுக்கு மட்டும் அவரது கதாபாத்திரம் பயன்பட்டிருக்கிறது.

சித்தார்த்தின் நண்பனாக கருணாகரன், காமெடிக்கு இவர்தான் பொறுப்பு என்றாலும் ஒரு சில வசனங்களால் மட்டும் கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் வரிசையில் அம்பிகா, 'ஆடுகளம்' நரேன் என பலர் இருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் தேவையான இடங்களில் மட்டும் வாசித்திருக்கிறார். சிம்ஹா வரும் காட்சிகளில் ஸ்பெஷலாக கவனம் செலுத்தியிருக்கிறார். கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு கோணங்களிலும், லைட்டிங்குகளிலும் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறது.

Tuesday, May 13, 2014

‘‘கோச்சடையான் வதந்திகள் . படம் வருகிற 23–ந் தேதி உறுதியாக திரைக்கு வரும்.

‘‘கோச்சடையான்  வதந்திகள் . படம் வருகிற 23–ந் தேதி உறுதியாக திரைக்கு வரும். 


கோச்சடையான் படம் 6 மொழிகளிலும் 2டி வடிவத்தில் தயாராகி, ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டு விட்டது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 3டி வடிவத்தில் தயாரான திரைப்படத்துக்கும் தணிக்கை செய்யப்பட்டு விட்டது.

3டி வடிவத்தில் தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டதால்தான் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட இயலவில்லை.


இதுதவிர, ஏற்கனவே சுமார் 4 ஆயிரம் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் முன்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்துக்குள் ஒரு லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று விட்டன. அதன்பிறகு மேலும் 2 ஆயிரம் திரையரங்குகள் கோச்சடையான் படத்தை திரையிட முன்வந்துள்ளன.

3டி வடிவத்தில் தயாராவதில் ஏற்பட்ட தாமதத்தினால், கோச்சடையான் படத்தை அனைத்து திரையரங்குகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப கால அவகாசம் தேவைப்பட்டது. படம், வருகிற 23–ந் தேதி அன்று வெளியாக தயார் நிலையில் உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்.

ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி, கோச்சடையான் படம் மே 23–ந் தேதி உறுதியாக வெளியாகும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

Monday, May 12, 2014

சந்தானத்தின் அவதாரம் :வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் .விமர்சனம்.

சந்தானத்தின் அவதாரம் :வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் .விமர்சனம்.


தெலுங்கில் சூப்பர் ஹிட்டான "மரியாதை ராமண்ணா"வின் தமிழ் ரீ-மேக் படம்தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

கதைப்படி ஹீரோ சந்தானம், பழைய சைக்கிள் ஒன்றில் கடை கடையாக வாட்டர்கேன் போடும் வாட்டர் சப்ளையர் வேலை பார்க்கிறார். சந்தானத்தின் "கறார் முதலாளி ஒருநாள், லோன் போட்டாவது நீ "சின்ன யானை லோடு ஆட்டோ வாங்கி வந்தால் தான் உனக்கு வேலை, அதுவரை நம் பிஸினஸூக்கு இந்த ஓட்(டை)ட சைக்கிள் ஒத்து வராது, நீயும் ஒத்து வரமாட்டாய்... என உதறிவிட, கதறி துடிக்கும் சந்தானம் காசுக்காக நாயாய், பேயாய் அலைகிறார்.

காலணா காசு கிடைத்தபாடில்லை... கடுப்பாகும் சந்தானம், அப்பா, அம்மாவை இழந்த அநாதையான தனக்கு, அடைக்கலம் கொடுத்திருக்கும் தூரத்து உறவிடம் பொழப்புக்கு என்ன செய்வேன்? என புலம்புகிறார். அந்த உறவோ, ஏன்? உனக்கென்ன குறை...? உனக்கு ஊரில் உங்க அப்பா சொத்து கொஞ்சம் இருக்கிறது என உயிலை எடுத்து காண்பிக்கிறார். அது கண்டு முகம் மலரும் சந்தானம் அதை கொடுங்கள், அந்த சொத்தை வித்து நான் பிழைத்து கொள்கிறேன் என்கிறார். ஆனால் அந்த உறவோ, அந்த ஊரில் பெரும் பகையும் உன் குடும்பத்திற்க இருக்கு என்பதால் தான் கடைசி வரை இந்த சொத்து விபரத்தை உன்னிடம் கூறாமல், வீட்டு வேலை செய்து உன்னை வளர்த்தார் உன் தாய்... அதனால் இந்த உயிலை இப்போதைக்கு உன்னிடம் தர முடியாது, நீ வெறுத்து போய் பேசியதால் உனக்கு ஆறுதல் அளிக்கும்படியாக இந்த உயிலை காண்பித்தேன், என்று கூற, பிடிவாதமாக அவரிடம் உயிலை பிடுங்கி கொண்டு அரவங்காடு எனும் அழகிய ஊரில் இருக்கும் தன் பூர்வீக சொத்தை விற்க ரயிலேறுகிறார் சந்தானம். தனக்கு ஆபத்பாந்தனமாக அதுநாள் வரை இருந்த சைக்கிளையும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்து விட்டும் கிளம்பும் சந்தானம், ரயிலில் ஹீரோயினை சந்திக்கிறார்.

தன் பூர்வீக சொத்து விற்பனை சம்பந்தமாக ஊர் பெரிய மனிதரான ராயர் வீட்டுக்குபோகும் சந்தானம், அங்கு அவர்கள் வழக்கப்படி விருந்தாளியாக உபசரிக்கப்படுகிறார். என்ன ஆச்சர்யம்.?! ராயரின் மகள்தான் சந்தானம் ரயிலில் சந்தித்த நாயகி ஆஷ்னா சவேரி என்பதும், அதைவிட ஆச்சர்யம், ப்ளஸ் அதிர்ச்சி, ஆஷ்னா சவேரி சந்தானத்தின் முறைப்பெண் என்பதும், ஆஷ்னாவின் அப்பா ராயரும், சகோதரர்களும் தான் 27 வருட பகையுடன் சந்தானத்தை போட்டுத்தள்ள காத்திருக்கும் பகையாளிகள் என்பதும் தான் டுவிஸ்ட். டுவிஸட்டுக்கே டுவிஸ்ட்!

தங்கள் வீட்டிற்குள் கொலை செய்வதில்லை... எனும் கொள்கையுடைய ராயரும், அவரது மகன்களும் விருந்தாளியான சந்தானத்தை வெளியில் வரவைத்து கொல்ல திட்டம் தீட்டுகின்றனர். அதை தெரிந்து கொள்ளும் சந்தானம், அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் ஜமாய்ப்பது தான் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் காமெடி கதைக்களம்! இதில் அதகளம் செய்திருக்கும் சந்தானம், வீட்டை விட்டு வெளியில் வந்தாரா? பகையாளிகளை வென்றாரா? பகையை கொன்றாரா? நாயகியின் காதலை உணர்ந்தாரா.? அவரை மணந்தாரா? என்பது தான் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் க்ளைமாக்ஸ்!

சந்தானம் வழக்கம் போலவே வரும் சீன்களில் எல்லாம் வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கிறார். அதிலும் ராஜகுமாரன் கோஷ்டியுடன் அவர் செய்யும் அலும்பு செம காமெடி! ஹீரோவாக நடித்திருப்பதால் உஷாராக வழக்கமான தனது இரட்டை அர்த்த வசனங்களை எல்லாம் தவிர்த்து "பன்ச் டயலாக்கு பேசி பட்டையை கிளப்பி இருக்கிறார் மனிதர் என்றால் மிகையல்ல! அதிலும், "டைமிங்காக, ""மதுரை பெருமை பேச சசிக்குமார், விஷால் எல்லாம் இருக்காங்க, சென்னையை பற்றி பேச என்னை விட்டா யார் இருக்கா.? எனக்கேட்டும் இடத்திலாகட்டும், ""பொண்ணுங்களோட "ஆக்சலேஷன் மயிண்டு தான் பல காதல் பிரிவுக்கு காரணம் என்றும், அதையும் மீறி அப்பா அம்மா, எப்படியும் பிரிச்சுடுவாங்கக்கிற தைரியத்தல தான் பொண்ணுங் காதலிக்கவே செய்றாங்க என்றும்..., அவர் அடிக்கும் பன்ச்கள் ஆகட்டும், அதற்கு உதாரணமாக அதே ரயிலில் பிரயாணிக்கும் ஒரு ஆணையும், பெண்ணையும் வைத்து சொல்லும் ரஜினி, கமல், மாதவன், சிம்பு, டயலாக்குகள் ஆகட்டும்... இன்னும் இஷ்டத்திற்கு கொளுத்தி போடும் சிரிப்பு வெடிகளில் ஆகட்டும் தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகிறது. கீப் இட் ஞூப் சந்தானம்!

ஆஷ்னா சவேரி, அசப்பில் சற்றே சதை போட்ட ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்கிறார். நடிப்பிலும், இளமை துடிப்பிலும் கூட அப்படியே. "மிர்ச்சி செந்தில், விடிவி கணேஷ், ராஜகுமாரன் உள்ளிட்டவர்களும் ஓ.கே.!

சித்தார்த் விபினின் பின்னணி இசை பலம். பாடல்களும், அதன் இசையும் பலவீனம். (ரீ-மேக் படத்திற்கு கூட டப்பிங் படங்கள் மாதிரியே தான் பாடல்கள் இருக்க வேண்டுமா? என்ன.?!) சக்தி, ரிச்சர்ட் என்.நாதன் இருவரின் ஒளிப்பதிவும் படத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. ரஜினியின் அண்ணாமலை படத்திற்குப்பின் "மதிவண்டியையும் ஒருபாத்திரமாக்கி, அதற்கு டி.ஆர். டைப்பில் ஒரு குரலையும் கொடுத்திருப்பதற்காக இயக்குநர் ஸ்ரீநாத்தை பாராட்டலாம்!

ஆகமொத்தத்தில், ""வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - ரசிகர்கள் ""சந்தானத்தை ஹீரோவக்கியுள்ள ஆயுதம்!

Sunday, May 11, 2014

தேசிய விருது பெற்ற தமிழ் குறும்படம்!

தேசிய விருது பெற்ற தமிழ் குறும்படம்!




ஒரு 7 நிமிட தமிழ் குறும்படம் பியூச்சர் பிலிம் அல்லாத கேட்டகிரியில் தேசிய விருது பெற்றுள்ளது. தர்மம் என்ற அந்த குறும்படம் ஏழரை நிமிடங்கள் ஓடக்கூடியது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் விருது பெற்ற இந்தப் படம், கேன்ஸ் திரைப்பட விழா வரை சென்று, தற்போது தேசிய விருதினை பெற்றுள்ளது. இதனை மனோன் எம்.அஸ்வின் என்பவர் இயக்கி இருக்கிறார். இதுவரை 7 குறும்படங்களை இயக்கி உள்ள இவர், தற்போது பிரபு சாலமனிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

ஒரு பணக்கார வீட்டு தம்பதிகள் தங்கள் மகனை பிச்சைக்கார சிறுவன்போல் வேடம் அணியச் செய்து பயிற்சி கொடுத்து பள்ளி மாறுவேட போட்டிக்கு அழைத்துச் செல்கிறார்கள். போகிற வழியில் போக்குவரத்து போலீஸ் லஞ்சம் வாங்குவதையும், அப்பா போக்குவரதுது போலீசுக்கு லஞ்சம் கொடுப்பதையும், வயதான நிலையில் பிச்சையெடுக்கும் முதியவரையும் சந்திக்கிறான். வீட்டில் சொல்லிக்கொடுத்த வசனங்களை மறந்து அந்த பிச்சைக்காரர் சொன்னதையே மேடையில் சொல்லி கைதட்டல் வாங்குகிறான். நிஜமான பிச்சைக்காரர் தர்மம் வாங்குகிறார் .மற்றவர்கள்தான் பிச்சை எடுக்கிறார்கள். இதுதான் குறும்படத்தின் அடிப்படை.

மிஷ்கின் இயக்கும் புதிய படம் பிசாசு.இசை மேஸ்ட்ரோ இளையராஜா!

மிஷ்கின் இயக்கும் புதிய படம் பிசாசு.இசை மேஸ்ட்ரோ இளையராஜா!


ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த  மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்துக்கு பிசாசு என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் பாலாவின் பி ஸ்டூடியோ தயாரிக்கிறது. வருகிற 14ந் தேதி பிசாசுவின் முதல்கட்ட படப்பிடிப்புகள் துவங்குகிறது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்று இதுவும் முற்றிலும் புதுமையான முறையில் உருவாக்கப்படும் படம். இப்போது திகில் படங்களின் சீசன் என்பதால் மிஷ்கின் தன் பாணியில் சொல்லும் திகில் கதை என்கிறார்கள். படத்திற்கான நடிகர், நடிகை தேர்வில் மும்முரமாக இருக்கிறார் மிஷ்கின்.

Friday, May 9, 2014

ராஜராஜசோழனின் போர்வாள் படத்தின் பாடல் கம்போசிங்கை மக்கள் மத்தியில் நடத்திய மேஸ்ட்ரோ இளையராஜா.சினேகன்

 ராஜராஜசோழனின் போர்வாள் படத்தின் பாடல் கம்போசிங்கை மக்கள் மத்தியில் நடத்திய மேஸ்ட்ரோ இளையராஜா.சினேகன்



ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்றுதான் அப்படி செய்தோம். ஆனால், இதைப்பற்றி நான் இளையராஜாவிடம் சொன்னபோது, அது சாத்தியப்படுமா என்றார். ஆனால் கண்டிப்பாக ஆகும் என்றேன். உங்களுக்கு சாத்தியம் என்றால் நான் வருகிறேன் என்றார். அதையடுத்து ராஜராஜசோழனின் குரு கரூர் சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தை தேர்வு செய்து மக்கள் முன்னிலையில் பாடல் கம்போஸிங் செய்தார் இளையராஜா.
அதில் 25000 பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுவரை எந்த இசையமைப்பாளர்களும் செய்யாத சாதனை அது. கரூரில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாமும், 10 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கினோம்.

* அப்போது இளையராஜாவின் மனநிலை எப்படி இருந்தது?
அந்த நிகழ்வின்போது இளையராஜா கண் கலக்கிபோனார். 37 வருடமாக என்னை அடைத்து போட்டுவிட்டனர். இன்றைக்குத்தான் முழுசாக வேலை பார்த்த திருப்தி கிடைத்துள்ளது என்று சொன்ன இளையராஜா, எனது சரித்திரத்தில் சினேகனுக்கும் ஒரு இடம் உண்டு என்று சொன்னார். அந்த வார்த்தைதான் இந்த படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய விருதாகும்.

* சரித்திர கால கதை என்கிறபோது பட்ஜெட் எகிறுமே?
இந்த படத்தில் சரித்திர காலம், நிகழ் காலம் என இரண்டும் இடம்பெறுகிறது. இருப்பினும் தேவையான செலவை எந்த குறையும இல்லாமல் செய்திருக்கிறேன்.
மேலும், இந்த படம் மீது இளையராஜாவுக்கு பிரியமும், ஈடுபாடும் அதிகம். அவரைப்பற்றி ஆயிரம் பக்க அளவில் ஒரு புத்தகமே எழுதுவேன். அவர் ஒரு ஞான குழந்தை போல் செயல்பட்டுள்ளார். மேலும் அவரிடத்தில் இந்த இளையராஜா வேண்டாம் 80களில் உள்ள இளையராஜாதான் எனக்கு வேண்டும் என்றேன். பதிலுக்கு சிரித்தார். என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்யுங்கள் என்றேன். செலவுக்கணக்கைப் பார்க்கும் அளவுகோல் வேண்டாம். எனக்கு இளையராஜாதான் வேண்டும் என்றேன். அதனால் பாடல்களுக்கு தேவையான செலவை தாராளமாக செய்து பாடல்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில், இது இளையராஜாவின் படம். 1100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நீதி மன்னனுக்கும், இளையராஜாவின் இசைக்கும் இருக்கிற உறவுதான் இந்த படம். இந்த இடத்தில் இன்னொரு விசயத்தையும் நான் நினைவுபடுத்த வேண்டும். சமீபத்தில் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளையராஜா, திரும்பி வீட்டிற்கு வந்த உடனேயே என்னை அழைத்தார். நாளைக்கே ரெக்கார்ட்டிங் வச்சிக்கலாமா, என்றார். அத்தனை ஈடுபாடு அவருக்கு. அவர் உடம்பை விட இந்த படத்தின் பாட்டு நல்லாயிருக்கனும்னு நெனச்சார். அந்த வகையில், மருத்துவமனையில் இருந்து வந்ததும் முதன்முதலாக என் படத்துக்குத்தான் இசையமைத்தார் இளையராஜா.

வாயில் சிகரெட்,கையில் மது போஸ் கொடுத்த நடிகை கங்கனா ரஹாவத்துக்கு எதிர்ப்பு!

வாயில் சிகரெட்,கையில் மது போஸ் கொடுத்த நடிகை கங்கனா ரஹாவத்துக்கு எதிர்ப்பு!




மது, சிகரெட்டுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த சிகரெட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை கங்கனா ரணாவத்துக்கு பெண்கள் சங்கம்  கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

பாலிவுட்டில் முன்னனி நடிகையான கங்கனா ரணாவத்  ஜெயம்ரவி ஜோடியாக ‘தாம்தூம்’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கங்கனா ரணாவத் சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்தார். அதில் ஆபாச உடையில் புகை பிடிப்பது போன்றும், மது அருந்துவது போன்றும் போஸ் கொடுத்து உள்ளார்.

கங்கனா ரணாவத், இதுபோல் போஸ் கொடுத்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று மும்பையில் உள்ள மகளிர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகைகள் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படக் கூடாது. சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பணத்துக்காக கலாசார சீரழிவுக்கு வித்திடும் வகையில் நடிகைகள் இதுபோல் போஸ் கொடுப்பது தொடர்ந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

Tuesday, April 15, 2014

NAAN SIKAPPU MANITHAN REVIEW(VIMARSANAM)

NAAN SIKAPPU MANITHAN REVIEW(VIMARSANAM)

விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் மூலம் தயாரித்து, நடித்திருக்கும் திரைப்படம், விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை', 'சமர்' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இளம் இயக்குனர் திரு இயக்கத்தில், விஷால் நடித்து மீண்டும் வெளிவந்திருக்கும் படம், இவை எல்லாவற்றுக்கு மேல் லட்சுமி மேனனுடன், விஷால் தரையில் உதட்டோடு உதடு வைத்து உறியும் முத்தக்காட்சி, தண்ணீருக்குள் முழுதும் நனையும்(!) காட்சி... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டு வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் 'நான் சிகப்பு மனிதன்'.

அதிர்ச்சிகள், ஆச்சர்யங்கள், ''அந்த'' மாதிரி விஷயங்கள் என்றால் நின்றபடியோ, நடந்தபடியோ உட்கார்ந்தபடியோ, எந்த நிலையில் இருக்கிறாரோ அந்த நிலையிலேயே தூங்கி விழும் நார்கோலப்ஸி எனும் தூக்க வியாதிக்கு சொந்தக்காரர் விஷால், ஸ்கூல் டீச்சரம்மா சரண்யா பொன்வண்ணனுக்கு ஒற்றை வாரிசு. பிறந்தது முதலே லட்சத்தில் ஒருவருக்கு இயற்கையாகவே இருக்கும் இந்த தூக்க வியாதியால் அல்லல்பட்டு வரும் விஷாலுக்கு நல்ல வேலையும், நல்ல பெண்ணும் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது.

அப்புறம்? அப்புறமென்ன.? இலையுதிர் காலம் இருந்ததென்றால் வசந்தகாலமும் வந்துதானே ஆக வேண்டும்.?! அரிதான வியாதியான நார்கோலப்ஸி பர்ஸனான விஷால், மெடிக்கல் காலேஜ் பாடமாகிறார். அதன்மூலம் ஐம்பதாயிரம் பணம் சம்பாதிக்கிறார். அதை வைத்து ஒரு லேப்-டாப், அதன்மூலம் பார்ட்-டைம் ஜாப், மாசம் இருபதாயிரம் சம்பாத்தியம் என கலக்குகிறார். கூடவே பெரிய இடத்துப் பெண் லட்சுமி மேனனின் நட்பும் கிடைக்கிறது. நட்பு, காதல் ஆகிறது. எனக்கு உன் மூலம் என் மகளுக்கு ஒரு வாரிசு வேண்டும், அது கிடைக்குமென்றால் காசு, பணம், ஜாதி, மதம் எதுபற்றியும் கவலை இல்லை... என்கிறார் லட்சுமியின் அப்பா ஜெயப்பிரகாஷ்!

நார்கோலப்ஸி (அதாங்க திடீர் தூக்க வியாதி...) கேரக்டரான விஷாலுக்கு தான் உணர்ச்சிகள் தூண்டப்படும்போது தூக்கம் வந்துவிடுமே... அப்புறம் எப்படி வாரிசுக்கு வழி வகுக்க முடியும்?. லட்சுமி மேனனின் தீவிர முயற்சியால் விஷாலுக்கு தண்ணீரில் தூக்கம் வராது... எனும் உண்மை கண்டுபிடிக்கப்படுகிறது. அப்புறமென்ன? ஜலகிரீடையில்(நமக்கு காட்டப்படுவதென்னவோ வெறும் முத்தம் மட்டும் தான் ஹீ... ஹீ...!) லட்சுமி, கல்யாணம் ஆகாமலே சுமார் இரண்டு மாத கர்ப்பமும் ஆகிறார்! அப்பா ஜெ.பி.யிடம் சொல்லி, அடுத்து டும் டும் டும் தான் என இருவரும் மகிழ்வோடு இருக்கும் வேளையில், இருவரையும் சுற்றி வளைக்கும் ஒரு முரட்டு கும்பல், அதிர்ச்சியில் தூங்கும் விஷாலை அப்படியே விட்டு விட்டு, லட்சுமி மேனனை கதற கதற கற்பழிக்கிறது! விஷால் விழித்தெழும்போது கோமா ஸ்டேஜில் லட்சுமி கிடக்க, கொதித்தெழும் விஷால், தேடிப்பிடித்து முரட்டு கும்பலையும், அந்த கற்பழிப்புக்கு பின்னணியில் இருக்கும் நபரையும் கொன்று குவிப்பதும், அந்த பின்னணி நபருக்கு விஷாலுடன் என்ன பகை? என்பது தான் எதிர்பாரா திருப்பங்கள் நிரம்பிய 'நான் சிகப்பு மனிதன்' வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

Monday, April 14, 2014

Raja raja cholan naan tamil song music notes

Raja raja cholan naan tamil song music notes

ong: Raja raja chozhan
Film: Rettai vaal kuruvi


-----------------------------------

Legend for the notes:

n3. s r2 g2 m1 p d1 n3 S       
B.  C D  D# F  G G# B  C+
lower octave  = "." is the suffix
higher octave = "+" is the suffix



------------------------------------


 raja raja cholan  naan          enai
 G C+ C+G  G  F D# F G           D#F
[p S  S p  p  m g  m p           g m]

 aalum kaadal desam    nee    dhaan
 G C+  C+ G   G F D#   D#FG   F
[p S   S  p   p m g    gmp    m]

 poove   kaadal   thene
 DD#FD#  CDD#D    B.CDC
[rgmg    srgr     n.srs]

 man meedu sorgam vandhu
 G.  D# D# D  C   D D#
[p.  g  g  r  s   r g]

 pennaaga aanade
 G. D# D# D C D
[p. g  g  r s r]

 ullasa bhoomi ingu undaanade
 G.D#D# D  C   D D# F G  G#G
[p.g g  r  s   r g  m p  d p]



Charanam 1
 kannodu   kangal etrum karpoora deepame
 D#+D#+D#+ D+ C+  D+D#+ D#+D+ C+ C+ G G
[G  G G    R  S   R G   G  R  S  S  p p]


 kaimeettum  bodu  paayum  minsaarame
 D#+D#+D#+   D+C+  D+ D#+  D#+D+C+B
[G  G  G     R S   R  G    G  R S n]


 ullasa      medai mele   oranga   naadaham
 D#+D#+D#+   D+C+  D+D#+  D#+D+C+  C+ G G
[G  G G      R S   R G    G R S    S  p p]


 inbangal   paadal sollum  en  thaayagam
 D#+D#+D#+  D+ C+  D+ D#+  D#+ D+  C+B
[G G  G     R  S   R  G    G   R   S n]


 ingangu  oonjalaga  naanpogiren
 A#A# A#  A  A#C+A#  A#  A#G#G
[n2n2 n2  d2 n2S n2  n2  n2d p]


 angangu aasai theeyil naanvegiren
 A#A# A# A A#  C+  A#  A#  A#G#G
[n2n2 n2 d2n2  S   n2  n2  n2d p]

 unraaga mohanam en kaadal vaahanam
 A#A# G  D#D D   B  B  G   G  F F
[n2n2 p  g r r   n  n  p   p  m m]


 sendaamarai sendenmazhai en aavi neeye devi
 G  F  G C+  G  F  G C+   G  F G  D#+D+ C+B
[p  m  p S   p  m  p S    p  m p  G  R  S n]

Thursday, April 10, 2014

மன்றம் வந்த தென்றலுக்கு song notes.

மன்றம் வந்த தென்றலுக்கு


manram  vandha thenralukku  manjam vara nenjam illaiyoa anbae  en anbae
s  s    g  g   s   s g  g   s  s   g g  s  s   g g  p.  rgs s  p. rgs s
C  C   D# D#   C   C D# D#  C  C  D# D# C  C  D# D# G.  DD#C C G. DD#C C

thottavudan  suttadhenna kattazhagu   vatta nilavoa  kannae en kannae
s   s g g    s  s g   g  s  s g  g    s  s  g g p.   rgss   p. rgss
C   C D# D#  C  C D#  D# C  C D#  D#  C  C D# D# G.  DD#CC  G. DD#CC

 boopaalamae  koodaadhenum    vaanam    undoa     sol
 g  m  p mp   g  m  p  pnd    pn n      Snnpdp    pm     g r
D#  F  G FG  D#  F  G  GA#G#  GA# A#   C+A#A#GG#G GF     D# D


(manram)


Stanza 1:

 thaamarai maelae neerththuli poal thalaivanum    thalaviyum    vaazhvadhenna
 R   S R   SR p   R     R  S  SR   S  S  S nS     n  n n dn     p    p d   p
D+  C+ D+ C+D+ G D+    D+ C+ C+D+ C+ C+ C+ A#C+  A# A# A# G#A#  G    G G#  G

 nanbargal poalae vaazhvadharku   maalaiyum  maelamum   thaevaiyenna
 R  S  R   SR p   R    R S   SR   S  S  nS   n  n dn    p   p  d  p
D+ C+ D+  C+D+ G D+   D+ C+ C+D+ C+ C+ A#C+ A# A# G#A#  G   G  G# G

sondhangalae illaamal bandha paasam kollaamal
p  d2 n3 n3  d2S  n3  p  d2  n3 n3  d2 S  n3
G  A  B  B   AC+  B   G  A   B  B   A C+  B

poovae un vaazhkaidhaan enna   sol
p  d2  n3 S    R  Rn3   n3SG   R
G  A   B C+   D+  D+B   BC+D#+ D+


(manram)



Stanza 2: (notes similar to Stanza 1)

maedaiyaip poalae vaazhkai alla naadagam aanadhum vilagich chella
odayaip poalae uravum alla paadhaigal maariyae payanam sella
vinnoadu dhaan ulaavum velli vanna nilaavum

ennoadu nee vandhaal enna vaa

Wednesday, April 9, 2014

என் இனிய பொன் நிலாவே ! பாடல் நோட்ஸ் en iniya pon nilaavae song notes

என் இனிய பொன் நிலாவே ! பாடல் நோட்ஸ்.

en iniya pon nilaavae
C D#D C  D  A#.C  C 

pon  nilavilen kanaavae
C   D# D C  D A#.C  C 

ninaivilae pudhu sugam dha dha dha dhaa dha dha
G G  G GCG G G   G GCG G#  G   F  G#    G   F

thodarudhae dhinam dhinam dha dha dha dhaa dha dha
G  G G G CG G  G   G  GCG G#  G   F  G#    G   F

(en iniya)

Stanza 1:
 panneeraith thoovum mazhai
 C+ C+ D#+   D+  D#+ C+ D+

 jillenra kaatrin  alai
 C+ C+ D#+ D+ D#+  C+D+

saerndhaadum innaeramae
F   G#   G  G# A#G# G G

 en nenjil ennennavoa
 C+ C+ D#+ D+ D#+ C+ D+

 ennangal  aadum  nilai
 C+ C+ D#+ D+ D#+ C+ D+

ennaasai unnoaramae
F G# G  G# A#G# G G

 venneela  vaanil   adhil  ennenna  maegam
 A# A#  G  A#G GD#  D# G   A# A# A  C+  A#

 oorgoalam poagum   adhil undaagum raagam
A# A#  G  A#G GD#  D# G  A# A# A  C+  A#

puriyaadhoa  en ennamae
G A#A# D#+  D+  F G G#

 anbae...
 G# B D+

(en iniya)

Stanza 2:
ponmaalai naerangalae en inba raagangalae
poovaana koalangalae
then kaatrin bimbangalae thaenaadum roajaakkalae
ennenna jaalangalae
kannoadu thoanrum siru kanneeril aadum
kai saerum kaalam adhai en nenjam thaedum
idhudhaanae en aasaigal
anbae...
(en iniya)                                                                                                                                      BY

                                                                                                                                               GUNVAR